Tuesday, 7 July 2015

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் கோட்டமட்ட ஆங்கிலத்தின போட்டியில் சாதனை.

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் கோட்டமட்ட ஆங்கிலத்தின போட்டியில் சாதனை.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கான மண்முனை தென்மேற்கு கோட்டத்துக்கான ஆங்கிலத்தின போட்டி நிகழ்வுகள் மட்/மமே/முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் இவ் வருடம் நடைபெற்றது .இந் நிகழ்வில் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவர்களும் பங்கு பற்றி இருந்தனர். இதில் குறித்த பாடசாலை மாணவிகள்  ஆறு இடங்களை  பாடசாலைக்கு பெற்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளனர். அத்தோடு இதில் நான்கு மாணவிகள் வலய மட்ட போட்டியில் பங்கு பற்றவும் தகமை பெற்றுள்ளனர்.

நிலைகளைப் பெற்ற மாணவிகள் விபரம் வருமாறு.

செல்வி .ந.அனுஷ்கா(தரம்-04) - முதலாம் இடம் (Copy Writing)
செல்வி .கு.சுவனியா (தரம்-07) - இரண்டாம்  இடம் (Recitation)
செல்வி .ச .ஷங்கவி (தரம்-08) - முதலாம் இடம் (Dictation)
செல்வி .க .கவிதா (தரம்-08) - இரண்டாம்  இடம் (Copy Writing)
செல்வி .க .கஜந்தினி (தரம்-08) - மூன்றாம்  இடம் (Dictation)
செல்வி .சௌ.கௌசினி (தரம்-10) - மூன்றாம்  இடம் (Copy Writing)

இம் மாணவிகள் இந் நிலைகளை பெறுவதற்கு இவர்களுக்கான பயிற்சிகளை,வழிநடத்தல்களை மேற்கொண்ட ஆசிரியர்களாக இப் பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் திரு.வி.நீரஜன் ஆசிரியர், அவருக்கு துணையாக நின்று செயற்படுகின்ற திரு.ச . கருணாமூர்த்தி ஆசிரியரும் திகழ்கின்றனர். அத்தோடு இப் போட்டிகளில் சிறந்த இடங்களை பெறுவதற்கு மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்குவிக்கின்றவர்களாக இப் பாடசாலையின் அதிபர்களான திரு.S.தேவராஜன் , திரு.T .ரவிராஜ் ஆகியோர் திகழ்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இவ் மாணவிகள் இவ் நிலைகளை பெற்றமைக்கு இப் பாடசாலையில் கற்பிக்கின்ற அனைத்து ஆசிரியர்களினதும் பங்களிப்பும் அளப்பரியது.