Thursday, 29 May 2014

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கலாசாலை இறுதியாண்டு மாணவர்களால் நடைபெற்ற மருத்துவ முகாம்

மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கலாசாலை இறுதியாண்டு மாணவர்களால்
 மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் மருத்துவ முகாம் ஒன்று 28.05.2014(செவ்வாய்க்கிழமை )   அன்று   இடம்பெற்றது. இதில்  மாணவர்களின் உடல் திணிவு சுட்டி (BMI index) பரிசோதிக்கப்பட்டதோடு அவற்றுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அத்துடன் எவ்வாறு நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை பேணுவது தொடர்பான கருத்துக்களும் அவர்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

மருத்துவ முகாமின் இறுதி நிகழ்வாக ஆரோக்கியமான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது தொடர்பான நாடகம் ஒன்றும் இவர்களால் நடித்துக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும்.

இந் நிகழ்வில்  பாடசாலையின் அதிபர் திரு .S .தேவராஜன்  மற்றும் பிரதி அதிபர். S. கருணாமூர்த்தி உட்பட பாடசாலையின் சகல ஆசிரிய ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கலாசாலை இறுதியாண்டு மாணவர்களால் நடைபெற்ற மருத்துவ முகாம்


Tuesday, 20 May 2014

மட்/மமே/கடுக்காமுனைவாணி வித்தியாலயத்தில் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையான கலந்துரையாடல்

மட்/மமே/கடுக்காமுனைவாணி வித்தியாலயத்தில் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையான கலந்துரையாடல் ஒன்று இன்று (20.05.2014) அதிபர் திரு .சு .தேவராஜன் தலைமையில் இடம்பெற்றது . இதில் விசேடமாக இந்த வருடம் க .பொ .த (சா/த) பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்கள் உட்பட அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர் .




இக் கூட்டத்தின் போது  ஆசிரியர்களால் மாணவர்கள் எவ்வாறு பாடசாலை வேளை  தவிர்ந்த ஏனைய  நேரங்களில் கல்வியில் நாட்டம் காட்ட வேண்டும் எனவும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும்  எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

பெற்றோர்கள், மாணவர்களின் கருத்துக்களும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.

இக் கூட்டத்தில் பாடசாலையின் பிரதி 
அதிபர் திரு .ச .கருணாமூர்த்தி உட்பட சகல ஆசிரிய ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.