மட்/மமே/கடுக்காமுனைவாணி வித்தியாலயத்தில் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையான
கலந்துரையாடல் ஒன்று இன்று (20.05.2014)
அதிபர் திரு .சு .தேவராஜன் தலைமையில் இடம்பெற்றது . இதில் விசேடமாக
இந்த வருடம் க .பொ .த (சா/த) பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்கள் உட்பட அவர்களின்
பெற்றோர்களும் கலந்துகொண்டனர் .
இக்
கூட்டத்தின் போது ஆசிரியர்களால் மாணவர்கள் எவ்வாறு பாடசாலை வேளை தவிர்ந்த
ஏனைய நேரங்களில்
கல்வியில் நாட்டம் காட்ட வேண்டும் எனவும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி
நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும் எனவும்
கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
பெற்றோர்கள், மாணவர்களின் கருத்துக்களும்
அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு அதற்கான
தீர்வுகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.
இக்
கூட்டத்தில் பாடசாலையின் பிரதி
அதிபர் திரு .ச .கருணாமூர்த்தி உட்பட சகல ஆசிரிய
ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment