Friday, 26 June 2015

கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் சமூக விஞ்ஞானப்போட்டியில் மாகாண மட்டப்போட்டிக்கு தெரிவு .

கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் சமூக விஞ்ஞானப்போட்டியில் மாகாண மட்டப்போட்டிக்கு தெரிவு .

மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்துக்கான சமூக விஞ்ஞானப்போட்டி மட்/மமே/முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவ மாணவிகளும் பங்கு பற்றி இருந்தார்கள்.இப் போட்டியில் மூன்று மாணவிகள் மாகாண மட்ட போட்டியில் பங்கு பற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வலய மட்ட போட்டியில் பெற்ற நிலைகள் வருமாறு.

செல்வி .ச .கௌசினி (தரம்-10) - 1 ம் இடம்.
செல்வி .க .கஜேந்தினி (தரம்-08) - 2 ம் இடம்.
செல்வி .உ .துனுஷ்கா (தரம்-07) - 2 ம் இடம்.


இம் மாணவிகள் இந் நிலைகளை பெறுவதற்கு இவர்களை வழிப்படுத்தி உரிய உத்திகளை வழங்கியவர்களாக  இப்பாடசாலையின் வரலாறு பாடத்தை கற்பிக்கின்ற ஆசிரியைகளான திருமதி.தி .தவராஜா , செல்வி .வே .சுஜாதா ஆசிரியைகளையுமே சாரும்.


Thursday, 18 June 2015

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் மாகாண மட்ட -2015 மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் சாதனை.

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் மாகாண மட்ட -2015 மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் சாதனை.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான , மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி-2015 வந்தாறுமூலை  கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில்  இடம்பெற்றது . இவ் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலையான  மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகளும் பங்கு பற்றி ஐந்து இடங்களை பெற்று பாடசாலை,வலயம் மற்றும் மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இடங்களை பெற்ற மாணவிகள் விபரம்

11 வயதுப்பிரிவு
செல்வி.செ.நிவேதா - முதலாம் இடம் (75மீற்றர்ஓட்டம் மற்றும் 100மீற்றர் ஓட்டம்)

17 வயதுப்பிரிவு
செல்வி .வி .யமுனா -மூன்றாம் இடம்(சட்டவேலி ஓட்டம்)

19 வயதுப்பிரிவு
செல்வி .ப .டிலோஜினி -மூன்றாம் இடம் (400மீற்றர் ஓட்டம்)
செல்வி .கோ .துளசினி -மூன்றாம் இடம் (5000மீற்றர் ஓட்டம்)

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் தேசிய ரீதியில் மகளீர் உதைபந்தாட்ட போட்டியில் கடந்த வருடங்களில் மூன்றாம் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று சாதனைகளை படைத்தமை யாவரும் அறிந்த விடயமே இவ் வடிப்படையில் மெய்வல்லுனர் போட்டிகளும் நாம் சளைத்தவர்கள்  இல்லை என்பதை இப் பாடசாலை மாணவிகள் எடுத்து காட்டியுள்ளார்கள்.

இம் மாணவிகளின் இச் சாதனைகளுக்கு வித்திட்டவர்களாக இப் பாடசாலையின் அதிபர் .திரு .S .தேவராஜன் அவர்களும் இச் சாதனைகளை புரிவதற்கு  மாணவிகளுக்கு பயிற்சிகளை வழங்கிய திரு .மா .ஜீவரெட்ணம் ஆசிரியரும் திகழ்கின்றார்கள் . அத்தோடு இச் சாதனைக்கு சக பயிற்றுவிப்பாளரான  திரு .S .வேந்தராஜா ஆசிரியர் உட்பட   இப்பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களின் பங்களிப்பும் அளப்பரியது.

இம் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(18.06.2015) வியாழக்கிழமை பாடசாலையின் இணைமுதல்வர்களான  திரு .S .தேவராஜன் மற்றும் திரு .T .ரவிராஜ் ஆகியோரின்  தலைமையில் காலை ஒன்று கூடல் நிகழ்வின் போது இடம்பெற்றது . இவ் நிகழ்வில் பிரதி அதிபர் .திரு .S .கருணாமூர்த்தி ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர் .

இதன் போது பாடசாலையின் முதல்வர்களான திரு .S .தேவராஜன் ,திரு .T .ரவிராஜ் மற்றும் பிரதி அதிபர் திரு .S .கருணாமூர்த்தி அவர்களும்  சாதனை படைத்த மாணவிகளை பாராட்டியும், பயிற்றுவிப்பாளர் திரு .மா .ஜீவரெட்ணம் ஆசிரியரின் அயராத அர்ப்பணிப்பு காரணமாகவே இச் சாதனை நிலைநாட்டப்படுள்ளது எனவும் தமது உரைகளில்  தெரிவித்தனர்.

பயிற்றுவிப்பாளர் திரு .மா .ஜீவரெட்ணம் ஆசிரியர் தமது உரையில் இவ் வெற்றிக்கு பங்களிப்பு நல்கிய அதிபர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் ஒன்பது இடங்களை பெற்று  மட்/மமே/ அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தையும் , தமது பாடசாலை ஐந்து இடங்களை பெற்று இரண்டாம் இடத்தை பெற்று கொடுத்துள்ளதாகவும் தெரிவித்ததோடு

வலயத்துக்கு கிடைத்த முதல் மூன்று இடங்களில் இரண்டு இடங்களை தமது பாடசாலை மாணவிகள் பெற்று கொடுத்துள்ளனர் எனவும் கூறினார்.