Friday, 26 June 2015

கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் சமூக விஞ்ஞானப்போட்டியில் மாகாண மட்டப்போட்டிக்கு தெரிவு .

கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் சமூக விஞ்ஞானப்போட்டியில் மாகாண மட்டப்போட்டிக்கு தெரிவு .

மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்துக்கான சமூக விஞ்ஞானப்போட்டி மட்/மமே/முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவ மாணவிகளும் பங்கு பற்றி இருந்தார்கள்.இப் போட்டியில் மூன்று மாணவிகள் மாகாண மட்ட போட்டியில் பங்கு பற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வலய மட்ட போட்டியில் பெற்ற நிலைகள் வருமாறு.

செல்வி .ச .கௌசினி (தரம்-10) - 1 ம் இடம்.
செல்வி .க .கஜேந்தினி (தரம்-08) - 2 ம் இடம்.
செல்வி .உ .துனுஷ்கா (தரம்-07) - 2 ம் இடம்.


இம் மாணவிகள் இந் நிலைகளை பெறுவதற்கு இவர்களை வழிப்படுத்தி உரிய உத்திகளை வழங்கியவர்களாக  இப்பாடசாலையின் வரலாறு பாடத்தை கற்பிக்கின்ற ஆசிரியைகளான திருமதி.தி .தவராஜா , செல்வி .வே .சுஜாதா ஆசிரியைகளையுமே சாரும்.


No comments:

Post a Comment