Wednesday, 20 November 2013

மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் முறைசாரா கல்விப்பிரிவு நடாத்திய தொழித் திறன் பொருள் கண்காட்சி

மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் முறைசாரா கல்விப்பிரிவு நடாத்திய  தொழித் திறன் பொருள் கண்காட்சி மட்/கடுக்காமுனை வாணி வித்யாலயத்தில் 19.11.2013.இடம்பெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு .G .ஸ்ரீநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு  கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு .N .தயாசீலன் ,முறைசாரா கல்விக்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர்  திருமதி .திருமதி .R .கருணாநிதி அவர்களும் அத்தோடு வலயக்கல்வி உயர் அதிகாரிகளும் இவ் நிகழ்வில் கலந்துகொண்டனர் .

இவ் நிகழ்வுகள் அனைத்தும் மட்/ கடுக்காமுனை வாணி வித்யாலய அதிபர் திரு .S .தேவராஜன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன .

இவ் நிகழ்வில் பயிற்சியை முடித்துக்கொண்ட மாணவர்களின் கேக் மற்றும் ஏனைய உணவுப்பண்டங்களும் அத்தோடு இலத்திரனியல் துறையில் பயிற்சியை முடித்துகொண்ட மாணவர்களின் ஆக்கத்திறன் களும் காட்சிபடுத்தபட்டன.

மாணவர்களின் கேக் மற்றும் ஏனைய உணவுப்பண்டங்கலுக்கான  பயிற்சிகள் திருமதி .C .சதீஸ்குமார் அவர்களால் பயிற்சி காலத்தில் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.










Tuesday, 12 November 2013

மட் / கடுக்காமுனை வாணி வித்தியாலய சுற்றாடல் முன்னோடிக்குழு மாணவர்களுக்கான சுற்றாடல் முன்னோடிசின்னம் வழங்கும் நிகழ்வு

மட் / கடுக்காமுனை வாணி வித்தியாலய சுற்றாடல் முன்னோடிக்குழு மாணவர்களுக்கான சுற்றாடல் முன்னோடிசின்னம் வழங்கும் நிகழ்வு இன்று (12.11.2013) அதிபர் திரு .S .தேவராஜன் தலைமையில் பாடசாலையின் ஒன்று கூடல் நிகழ்வின் போது இடம்பெற்றது. இவ் நிகழ்வில் மட்டகளப்பு மாவட்ட சுற்றாடல் உத்தியோகத்தர் திரு .K .பவாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார் . 

இவ் நிகழ்வுகள் சுற்றாடல் முன்னோடிக்குழு பொறுப்பாசிரியர்
 திரு .வி .நீரஜன் ஆசிரியரின்  நெறியாள்கையில் இடம்பெற்றன .

இதன் பொது சுற்றாடல் முன்னோடி படையணி மாணவர்களுக்கு சுற்றாடல் முன்னோடிசின்னங்கள் அதிபர் , சுற்றாடல் உத்தியோகத்தர் மற்றும் ஆசிரியர்களால் சூட்டப்பட்டன . அத்தோடு அவர்களுக்கான குறிப்பு புத்தகங்களும் தொப்பிகளும் வழங்கப்பட்டன .

























Thursday, 17 October 2013

எமது பாடசாலையின் வாணி விழா

எமது பாடசாலையின் வாணி விழா அதிபர் திரு .சு .தேவராஜன் தலைமையில் அக்டோபர் 13,14 ஆம் திகதிகளில் பாடசாலையில் இடம்பெற்றது . இதில் பிரதி அதிபர் .திரு .ச .கருணாமூர்த்தி உட்பட சகல ஆசிரியைகள்  , ஆசிரியர்கள்  மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர் .



























இறுதி நாளான விஜயதசமி அன்று (அக்டோபர் -14) அதிபர் மற்றும் பிரதி அதிபரின் தலைமையில் ஏடு தொடக்கும் நிகழ்வும் இடம்பெற்றது .