Wednesday, 20 November 2013

மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் முறைசாரா கல்விப்பிரிவு நடாத்திய தொழித் திறன் பொருள் கண்காட்சி

மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் முறைசாரா கல்விப்பிரிவு நடாத்திய  தொழித் திறன் பொருள் கண்காட்சி மட்/கடுக்காமுனை வாணி வித்யாலயத்தில் 19.11.2013.இடம்பெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு .G .ஸ்ரீநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு  கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு .N .தயாசீலன் ,முறைசாரா கல்விக்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர்  திருமதி .திருமதி .R .கருணாநிதி அவர்களும் அத்தோடு வலயக்கல்வி உயர் அதிகாரிகளும் இவ் நிகழ்வில் கலந்துகொண்டனர் .

இவ் நிகழ்வுகள் அனைத்தும் மட்/ கடுக்காமுனை வாணி வித்யாலய அதிபர் திரு .S .தேவராஜன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன .

இவ் நிகழ்வில் பயிற்சியை முடித்துக்கொண்ட மாணவர்களின் கேக் மற்றும் ஏனைய உணவுப்பண்டங்களும் அத்தோடு இலத்திரனியல் துறையில் பயிற்சியை முடித்துகொண்ட மாணவர்களின் ஆக்கத்திறன் களும் காட்சிபடுத்தபட்டன.

மாணவர்களின் கேக் மற்றும் ஏனைய உணவுப்பண்டங்கலுக்கான  பயிற்சிகள் திருமதி .C .சதீஸ்குமார் அவர்களால் பயிற்சி காலத்தில் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.










No comments:

Post a Comment