Friday, 30 January 2015

தரம் -01 மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்கான ஊர்வலம்

தரம் -01 மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்கான ஊர்வலம் இன்று (30.01.2015) எமது  பாடசாலை அதிபர் .திரு .S .தேவராஜன் தலைமையில் பாடசாலையில் இருந்து ஆரம்பித்து கடுக்காமுனை கிராம வீதிகளின் ஊடாக இடம்பெற்றது . இவ் நிகழ்வில் தரம் -01 மாணவர்கள் தமது காவடி ஆட்டம் மூலம் தமது திறமையை ஊர்வலத்தில் வெளிப்படுத்தினர் . இவ் நிகழ்வு தரம் -01 க்கு கற்பிக்கும் ஆசிரியை திருமதி .சு.சோமசுந்தரம் அவர்களால் திட்டமிடப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .


இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய  விசேட கல்விக்கான உதவிக்கல்வி பணிப்பாளரும் இப் பாடசாலைக்கு பொறுப்பான PSI Coordinator உம்  ஆன திரு .S .கமலநாதன் கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தார். 











Monday, 19 January 2015

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தின் தரம்-01 க்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தின் தரம்-01 க்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (19.01.2015) அதிபர் திரு .S .தேவராஜன் தலைமையில் இடம்பெற்றது . இந் நிகழ்வில் புதிதாக தரம் -01 க்கு சேர்க்கப்படுகின்ற மாணவர்கள் ஏனைய மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய  விசேட கல்விக்கான உதவிக்கல்வி பணிப்பாளரும் இப் பாடசாலைக்கு பொறுப்பான PSI Coordinator உம்  ஆன திரு .S .கமலநாதன் கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தார். 

அத்தோடு இந்  நிகழ்வில் இப்[ பாடசாலையின் பிரதி அதிபர் திரு .S .கருணாமூர்த்தி , பாடசாலையின் ஆசிரிய ஆசிரியர்கள் , கல்விசார ஊழியர்கள் மற்றும் புதிதாக இணையும்  மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர் .

இதன் போது உதவிக்கல்விப்பணிப்பாளர்,அதிபர் ,பிரதி அதிபர் மற்றும்  ஆசிரியர்கள்,  மாணவர்களின் கல்வி வளர்ச்சி தொடர்பாகவும்  பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு  எவ்வாறு  ஒத்துழைப்பை வழங்கவேண்டும்  போன்றன தொடர்பாக  உரைகளை நிகழ்த்தினர். அதன் பின்பு மாணவர்களின் கலை   நிகழ்வுகளும் இடம்பெற்றன.