Monday, 20 October 2014

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் ஆசிரியதின நிகழ்வுகள்

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் ஆசிரியதின நிகழ்வுகள்

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் ஆசிரியதின நிகழ்வுகள் இன்று அதாவது 20.10.2014 (திங்கட்கிழமை) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன. இந் நிகழ்வுகளில் பாடசாலையின் அதிபர்.திரு.S.தேவராஜன் ,பிரதி அதிபர்.திரு .S .கருணாமூர்த்தி உட்பட ஆசிரிய ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வுகள் அனைத்தும் இவ் வருடம் க.பொ.த.சாதாரண பரீட்சை எழுத உள்ள தரம்.11 மாணவர்களின் நெறியாள்கையில் இடம்பெற்றன. இதன் போது அதிபர்,பிரதி அதிபர் ,ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதோடு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தமது ஆசிர்வாதங்களையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது .

இதன் பின் கலைநிகழ்வுகள் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன. இதில் மாணவர்களால் ஆசிரியர்களை பாராட்டும் விதமாக நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டன. அத்தோடு மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு ஆசிரியர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான  ஆசிரியர்களுக்கான கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

பின்பு  முக்கிய நிகழ்வாக திரு.N .யோகேந்திரன் ஆசிரியரால் இயற்றப்பட்டு இசையமைக்கப்பட்ட ஆசிரியர்களை கௌரவிக்கின்ற பாடலான .."பாடம்மேல பாடம் சொல்ல பாடசாலை வாரவரே ....."  எனும் பாடல்  தரம் .07 மற்றும் தரம் .11  மாணவிகளால் இசைக்கப்பட்டது.

தரம்.11 மாணவர்களினால் புத்தாக்க நிகழ்வாக ஆசிரியர் தின நிகழ்வுகளின் நிகழ்ச்சி நிரல் பல்லூடக தொழில்நுட்பம் ஊடக திரையில் நிகழ்வுகள் இடம்பெறும் போது  காட்சிபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது .



Thursday, 2 October 2014

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வு

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வு

 மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை(02/10/2014) பாடசாலையில் அதிபர் திரு.S.தேவராஜன் தலைமையில் இடம்பெற்றது. இப் பாடசாலையில் வாணி விழா நிகழ்வுகள் மூன்று நாட்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்றைய தினம் கும்பம் வைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு  இரண்டாவது நாள் இன்று இப் பாடசாலையின் பழைய மாணவர்களால் பூஜைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாள் இப் பாடசாலையின் தமிழ் மற்றும் சமய பாட ஆசிரியரான திரு .N .யோகேந்திரன் ஆசிரியரின் நெறியாள்கையில் பஜனை இடம்பெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சரஸ்வதி அன்னையின் அருளை பெற்றனர்.

மூன்றாவது நாளான நாளைய தினம் ஏடு தொடங்கும் நிகழ்வுகள் உட்பட தீர்த்த நிகழ்வுகளுடன் வாணி விழா நிகழ்வுகள் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் சிறுவர் தினம்.



மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் சிறுவர் தினம் அதிபர் திரு .S.தேவராஜன் தலைமையில் இன்று அதாவது வியாழக்கிழமை (02.10.2014) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வின் போது மாணவர்களுக்கு இனிப்புக்கள் மற்றும் எழுதுகருவிகள் அதிபர் மற்றும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டன.

அத்துடன் இந் நிகழ்வில் அதிபர்,பிரதி அதிபர் திரு .S .கருணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்களால்  சிறுவர் தின வாழ்த்து செய்திகள் மற்றும் ஆலோசனைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந் நிகழ்வின் விசேட அம்சமாக இப் பாடசாலையின் தமிழ் ஆசிரியர் திரு .N .யோகேந்திரன் ஆசிரியரால் உருவாக்கப்பட்ட சிறுவர்தினப் பாடலொன்று அவராலே இசை அமைக்கப்பட்டு தரம் -11 மாணவிகளால் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஏனைய வகுப்பு மாணவர்களாலும் சிறுவர்தினம் தொடர்பான நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.