Thursday, 2 October 2014

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் சிறுவர் தினம்.



மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் சிறுவர் தினம் அதிபர் திரு .S.தேவராஜன் தலைமையில் இன்று அதாவது வியாழக்கிழமை (02.10.2014) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வின் போது மாணவர்களுக்கு இனிப்புக்கள் மற்றும் எழுதுகருவிகள் அதிபர் மற்றும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டன.

அத்துடன் இந் நிகழ்வில் அதிபர்,பிரதி அதிபர் திரு .S .கருணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்களால்  சிறுவர் தின வாழ்த்து செய்திகள் மற்றும் ஆலோசனைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந் நிகழ்வின் விசேட அம்சமாக இப் பாடசாலையின் தமிழ் ஆசிரியர் திரு .N .யோகேந்திரன் ஆசிரியரால் உருவாக்கப்பட்ட சிறுவர்தினப் பாடலொன்று அவராலே இசை அமைக்கப்பட்டு தரம் -11 மாணவிகளால் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஏனைய வகுப்பு மாணவர்களாலும் சிறுவர்தினம் தொடர்பான நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.

No comments:

Post a Comment