Monday, 20 October 2014

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் ஆசிரியதின நிகழ்வுகள்

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் ஆசிரியதின நிகழ்வுகள்

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் ஆசிரியதின நிகழ்வுகள் இன்று அதாவது 20.10.2014 (திங்கட்கிழமை) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன. இந் நிகழ்வுகளில் பாடசாலையின் அதிபர்.திரு.S.தேவராஜன் ,பிரதி அதிபர்.திரு .S .கருணாமூர்த்தி உட்பட ஆசிரிய ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வுகள் அனைத்தும் இவ் வருடம் க.பொ.த.சாதாரண பரீட்சை எழுத உள்ள தரம்.11 மாணவர்களின் நெறியாள்கையில் இடம்பெற்றன. இதன் போது அதிபர்,பிரதி அதிபர் ,ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதோடு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தமது ஆசிர்வாதங்களையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது .

இதன் பின் கலைநிகழ்வுகள் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன. இதில் மாணவர்களால் ஆசிரியர்களை பாராட்டும் விதமாக நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டன. அத்தோடு மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு ஆசிரியர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான  ஆசிரியர்களுக்கான கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

பின்பு  முக்கிய நிகழ்வாக திரு.N .யோகேந்திரன் ஆசிரியரால் இயற்றப்பட்டு இசையமைக்கப்பட்ட ஆசிரியர்களை கௌரவிக்கின்ற பாடலான .."பாடம்மேல பாடம் சொல்ல பாடசாலை வாரவரே ....."  எனும் பாடல்  தரம் .07 மற்றும் தரம் .11  மாணவிகளால் இசைக்கப்பட்டது.

தரம்.11 மாணவர்களினால் புத்தாக்க நிகழ்வாக ஆசிரியர் தின நிகழ்வுகளின் நிகழ்ச்சி நிரல் பல்லூடக தொழில்நுட்பம் ஊடக திரையில் நிகழ்வுகள் இடம்பெறும் போது  காட்சிபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது .



No comments:

Post a Comment