மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சமூக விஞ்ஞான போட்டியில் வெற்றியீட்டிய பாடசாலைகளை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. இதில் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயம், பங்குபற்றிய Type.I பாடசாலைகளில் அதிக இடங்களைபெற்று வலயத்தில் முதலாம் இடத்தினையும் அத்தோடு Type.I,II,III பாடசாலைகளுடன் மதிப்பிடும் போது வலயத்தில் மூன்றாவது இடத்தினையும் பெற்று பெருமை சேர்த்துள்ளது.
இவ்வாறு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவிகளின் பெயர் விபரம் வருமாறு.
செல்வி .ச .கௌசினி (தரம்-10) - 1 ம் இடம்.
செல்வி .க .கஜேந்தினி (தரம்-08) - 2 ம் இடம்.
செல்வி .உ .துனுஷ்கா (தரம்-07) - 2 ம் இடம்.
செல்வி .க .கவிதா (தரம்-08) - 3 ம் இடம்.
செல்வி .ர .சுபேகா (தரம்-06) - 3 ம் இடம்.
செல்வி . தி.தீபிகா (தரம்-10) - 3 ம் இடம்.
இம் மாணவிகளுக்கான வெற்றி சான்றிதழ்கள் பரிசளிப்பு நிகழ்வின் போது வழங்கப்பட்டன.
இம் மாணவிகள் இந் நிலைகளை பெறுவதற்கு இவர்களை வழிப்படுத்தி உரிய உத்திகளை வழங்கியவர்களாக இப்பாடசாலையின் வரலாறு பாடத்தை கற்பிக்கின்ற ஆசிரியைகளான திருமதி.தி .தவராஜா , செல்வி .வே .சுஜாதா ஆசிரியைகளையுமே சாரும்.
இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 05.10.2015(திங்கட்கிழமை) அதிபர்.சு.தேவராஜன் தலைமையில் பாடசாலையின் காலை ஒன்றுகூடலின் போது இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிபர்.த.ரவிராஜ், பிரதி அதிபர்.ச.கருணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.