Wednesday, 7 October 2015

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவி வலய மட்ட விஞ்ஞான வினாடி வினாவிடைப் போட்டியில் மூன்றாம் இடம்.


இன்று(07.10.2015) மட்டக்களப்பு மேற்கு கல்வி  வலயத்துக்கான விஞ்ஞான வினாடி வினாவிடைப் போட்டி மட்/மமே/குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. இதில் பங்குபற்றிய தரம்-08 மாணவி செல்வி.அருட்சந்திரன் அனுஷ்கா மூன்றாம் இடத்தை பெற்றுகொண்டார்.

இம் மாணவி இவ்விடத்தை பெற்றமைக்குரிய பெருமை இவருக்கு பயிற்சிகளை வழங்கிய இப் பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியர். சி .மயூரன் அவர்களையே சாரும்.


தரம் -5 புலமைபரிசில் பரீட்சையில் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவன் சித்தி



இன்று (07.10.2015) வெளியான தரம் -5 புலமைபரிசில் பரீட்சைப் புள்ளியின் அடிப்படையில் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவன் செல்வன்.சத்யகுணசீலன் சாணுஜன் 155 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார். இம் மாணவன் சித்தியடைவதற்க்கு காரண கர்த்தாவாக இருப்பவர் இம் மாணவனுக்கு கற்பித்த ஆசிரியை திருமதி .சி .மனோகரன் ஆவார். இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (07.10.2015) பாடசாலையின் காலை ஒன்று கூடலின் போது இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் .சு .தேவராஜன் ,பிரதி அதிபர் .ச .கருணாமூர்த்தி ,ஆசிரிய ஆசிரியர்கள் ,கல்விசார ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.



Tuesday, 6 October 2015

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு-2015


மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு 06.10.2015(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந் நிகழ்வின்   போது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களால் கௌரவிக்கப்பட்டதோடு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கலைநிகழ்வுகளும்  இடம்பெற்றன.

மேற்படி நிகழ்வில் பாடசாலையின் அதிபர் .சு .தேவராஜன் , அதிபர் த.ரவிராஜ்,பிரதி அதிபர் ச.கருணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்களும் கலந்துகொண்டனர்.









Monday, 5 October 2015

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயம் சமூக விஞ்ஞான போட்டியில் வலயத்தில் சாதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி  வலய  சமூக விஞ்ஞான போட்டியில் வெற்றியீட்டிய பாடசாலைகளை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. இதில் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயம், பங்குபற்றிய  Type.I பாடசாலைகளில் அதிக இடங்களைபெற்று  வலயத்தில் முதலாம் இடத்தினையும்   அத்தோடு Type.I,II,III பாடசாலைகளுடன் மதிப்பிடும் போது வலயத்தில் மூன்றாவது இடத்தினையும் பெற்று பெருமை சேர்த்துள்ளது.

இவ்வாறு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவிகளின் பெயர் விபரம் வருமாறு.

செல்வி .ச .கௌசினி (தரம்-10) - 1 ம் இடம்.
செல்வி .க .கஜேந்தினி (தரம்-08) - 2 ம் இடம்.
செல்வி .உ .துனுஷ்கா (தரம்-07) - 2 ம் இடம்.
செல்வி .க .கவிதா  (தரம்-08) - 3 ம் இடம்.
செல்வி .ர .சுபேகா  (தரம்-06) - 3 ம் இடம்.
செல்வி . தி.தீபிகா  (தரம்-10) - 3 ம் இடம்.

இம் மாணவிகளுக்கான வெற்றி சான்றிதழ்கள் பரிசளிப்பு நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

இம் மாணவிகள் இந் நிலைகளை பெறுவதற்கு இவர்களை வழிப்படுத்தி உரிய உத்திகளை வழங்கியவர்களாக  இப்பாடசாலையின் வரலாறு பாடத்தை கற்பிக்கின்ற ஆசிரியைகளான திருமதி.தி .தவராஜா , செல்வி .வே .சுஜாதா ஆசிரியைகளையுமே சாரும்.

இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 05.10.2015(திங்கட்கிழமை) அதிபர்.சு.தேவராஜன் தலைமையில் பாடசாலையின் காலை ஒன்றுகூடலின் போது இடம்பெற்றது.  இந்நிகழ்வில் அதிபர்.த.ரவிராஜ், பிரதி அதிபர்.ச.கருணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.