Wednesday, 19 June 2013

மட் /கடுக்காமுனை வாணி வித்தியாலய மகளீர் உதைபந்தாட்ட அணி மாகாண மட்டரீதியில் இடம்பெற்ற போட்டியில் 4 க்கு 0 என்ற ரீதியில் அபரீத வெற்றி

எமது பாடசாலையின் மகளீர்  உதைப்பந்தாட்ட அணியினர் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற போட்டியில் பங்கு பற்றி வெற்றிபெற்று தேசிய ரீதியான மகளீர் உதைபந்தாட்ட போட்டியில் பங்கு பற்றுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது .

கடந்த 18.06.2013(நேற்று ) மட்டக்களப்பு மட்டிகளி விளையாட்டு மைதானத்தில்  மாகாண மட்ட மகளீர் உதைபந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றன . இதில் வலய மட்டத்தில் வெற்றியீட்டிய பாடசாலை அணிகள் பங்குபற்றின . இதில் எமது பாடசாலை மகளீர் அணியும் பங்கு பற்றியது .

இதில் இறுதி போட்டியில் மட் /அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தை எதிர்த்து எமது பாடசாலை அணி போட்டியிட்டது . இதில் எமது அணியில் விளையாடிய மாணவிகளின் அபரிதமான விளையாட்டின் பயனாக நான்குக்கு பூச்சியம் (4 க்கு 0) என்ற அடிப்படையில் எமது மகளீர் அணி மாபெரும் வெற்றியீட்டியது .

இவ் வெற்றிக்கு எமது அணியில் விளையாடிய மாணவிகளின் திறமையும் அவர்களின் அயராத பங்களிப்பும் ஒரு காரணமாகும் .அதுமட்டுமன்றி இவர்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் இவர்களுக்கு பயிற்சியை வழங்கி  தாய் , தந்தை ஸ்தானத்தில் இவர்களின் வளர்ச்சியில் தமது வாழ்வின்  முழுப்பகுதியை இவர்களோடு தியாகம் பண்ணுகின்ற திரு .மா .ஜீவரெட்ணம் ஆசிரியரே ஆகும் .

கடந்த வருடமும் எமது பாடசாலையின் மகளீர் உதைபந்தாட்ட அணி தேசியமட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்றதுக்கு  திரு .மா .ஜீவரெட்ணம் ஆசிரியரின் பங்களிப்பே அளப்பெரியதாகும் .



எமது பாடசாலை மகளீர் உதைபந்தாட்ட அணியினர் தேசிய ரீதியில் வெற்றியடைவர் என்பது உறுதி .
















.

Wednesday, 12 June 2013

விஞ்ஞான அறிவுப்போட்டியில் எமது பாடசாலை மாணவி இரண்டாம் இடத்தைப்பெற்று வலய மட்ட போட்டிக்கு செல்வதற்கு தெரிவாகியுள்ளார் .

விஞ்ஞான அறிவுப்போட்டியில் எமது பாடசாலை மாணவி இரண்டாம் இடத்தைப்பெற்று வலய மட்ட போட்டிக்கு செல்வதற்கு  தெரிவாகியுள்ளார் .

மட் / அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விஞ்ஞான போட்டியில் எமது பாடசாலையில் தரம் -9 இல் கல்விகற்கும்  மாணவி செல்வி .N .யுனித்ரா இரண்டாம் இடத்தை பெற்று வலய மட்ட போட்டிக்கு செல்வதற்கு தகுதி பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார் .

இப் பெருமை விஞ்ஞான ஆசிரியர் திரு. மா .ஜீவரெட்ணம் மற்றும் செல்வி .வே .சுஜாதா ஆசிரியை அவர்களையே சாரும் .

Monday, 10 June 2013

எமது பாடசாலை நீண்ட கால இடைவெளிக்கு பின் ஆங்கில தின போட்டியில் இங்கு புதிதாக கடமை ஏற்றுள்ள ஆங்கில ஆசிரியர் திரு .வி .நீரஜன் மற்றும் திரு .க .கருணாமூர்த்தி ஆசிரியர்களின் அயராத முயற்சியின் பயனாக இரு நிலைகளை பெற்றுள்ளது .


எமது பாடசாலை நீண்ட கால இடைவெளிக்கு பின் ஆங்கில தின போட்டியில்
இங்கு புதிதாக கடமை ஏற்றுள்ள  ஆங்கில ஆசிரியர் திரு .வி .நீரஜன்  மற்றும் திரு .க .கருணாமூர்த்தி ஆசிரியர்களின்  அயராத முயற்சியின் பயனாக இரு நிலைகளை பெற்றுள்ளது .

கோட்டமட்டத்தில் இடம்பெற்ற ஆங்கிலத்தின போட்டியில் எமது பாடசாலை மாணவிகள் "Copy Writing" நிகழ்வில் கலந்துகொண்டு முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களை  பெற்று வெற்றி பெற்றுள்ளனர் .

செல்வி . A .அனுஷ்கா  (தரம் -06)  -  முதலாம் இடம் 


செல்வி .S .கௌசினி  (தரம் -08)  - மூன்றாம் இடம் .


இதில் செல்வி . A .அனுஷ்கா வலய மட்ட போட்டியில் பங்கு பெற தகைமை பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும் .





சுற்றாடல் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வுகள்

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையில் பிரதி அதிபர் .திரு . க .கருணாமூர்த்தி தலைமையில் எமது பாடசாலையின் காலைகூட்டத்தில் இடம்பெற்றது . இவ் வைபவத்துக்கு பட்டிப்பளை பிரதேச சுற்றாடல் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு .ஆ .பவாகரன் கலந்துகொண்டு சிறப்பித்தார் . இதன்போது பாடசாலையின் ஆசிரியர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர் .

பாடசாலையின் சூழலுக்கு பொறுப்பான ஆசிரியரான திரு .வி .நீரஜன் அவர்களால் இவ்வருட சுற்றாடல் தின  தலைப்பான "அநாவசிய நுகர்வை தவிப்போம்" எனும் தலைப்பில் விரிவுரை ஒன்று நிகழ்த்தப்பட்டது .

பிரதி அதிபர் உட்பட சுகாதார பாதுகாப்பு உத்தியோகத்தரும் இன் நிகழ்வில் உரை நிகழ்த்தினர் .


இதன் போது 8 மரக்கண்டுகள் பாடசாலை வளவினுள் ஆசிரியர்களால்  நடப்பட்டன .





















Thursday, 6 June 2013

வலயமட்டத்தில் இடம்பெற்ற சமூக விஞ்ஞானபோட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் சாதனை படைத்து மாகாணமட்டம் செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வலயமட்டத்தில் இடம்பெற்ற சமூக விஞ்ஞானபோட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் சாதனை படைத்து மாகாணமட்டம் செல்ல  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் விபரம்                                                                           நிலை 

யோ .ஷங்கவி (தரம்-06)                                                                               01
க .கஜேந்தினி   (தரம்-06)                                                                               03

சு .தயதீபன்         (தரம்-07)                                                                              02
ச .கௌஷினி     (தரம்-08)                                                                              01
அ .ஜினோஜா     (தரம்-10)                                                                              01

இவர்களது இச் சாதனைக்கு இவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களான திருமதி .T .தவராஜா , செல்வி .வே .சுஜாதா ஆகியோரையே சாரும் .