எமது பாடசாலையின் மகளீர் உதைப்பந்தாட்ட அணியினர் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற போட்டியில் பங்கு பற்றி வெற்றிபெற்று தேசிய ரீதியான மகளீர் உதைபந்தாட்ட போட்டியில் பங்கு பற்றுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது .
கடந்த 18.06.2013(நேற்று ) மட்டக்களப்பு மட்டிகளி விளையாட்டு மைதானத்தில் மாகாண மட்ட மகளீர் உதைபந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றன . இதில் வலய மட்டத்தில் வெற்றியீட்டிய பாடசாலை அணிகள் பங்குபற்றின . இதில் எமது பாடசாலை மகளீர் அணியும் பங்கு பற்றியது .
இதில் இறுதி போட்டியில் மட் /அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தை எதிர்த்து எமது பாடசாலை அணி போட்டியிட்டது . இதில் எமது அணியில் விளையாடிய மாணவிகளின் அபரிதமான விளையாட்டின் பயனாக நான்குக்கு பூச்சியம் (4 க்கு 0) என்ற அடிப்படையில் எமது மகளீர் அணி மாபெரும் வெற்றியீட்டியது .
இவ் வெற்றிக்கு எமது அணியில் விளையாடிய மாணவிகளின் திறமையும் அவர்களின் அயராத பங்களிப்பும் ஒரு காரணமாகும் .அதுமட்டுமன்றி இவர்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் இவர்களுக்கு பயிற்சியை வழங்கி தாய் , தந்தை ஸ்தானத்தில் இவர்களின் வளர்ச்சியில் தமது வாழ்வின் முழுப்பகுதியை இவர்களோடு தியாகம் பண்ணுகின்ற திரு .மா .ஜீவரெட்ணம் ஆசிரியரே ஆகும் .
கடந்த வருடமும் எமது பாடசாலையின் மகளீர் உதைபந்தாட்ட அணி தேசியமட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்றதுக்கு திரு .மா .ஜீவரெட்ணம் ஆசிரியரின் பங்களிப்பே அளப்பெரியதாகும் .
எமது பாடசாலை மகளீர் உதைபந்தாட்ட அணியினர் தேசிய ரீதியில் வெற்றியடைவர் என்பது உறுதி .
.
No comments:
Post a Comment