Thursday, 28 March 2013

எமது பாடசாலையில் "தேடல் கூடம் " எனும் பெயரில் புதிய வாசிகசாலை நிர்மாணப்பணிகள் ஆரம்பம் .

எமது பாடசாலையில் "தேடல் கூடம் " எனும் பெயரில் புதிய வாசிகசாலை நிர்மாணப்பணிகள் திரு . N .யோகேந்திரன் ஆசிரியர் தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டன .

 எதிர்வரும் ஏப்ரல் 01 திகதி எமது பாடசாலைக்கு மாணவர்களின் நலன்கருதி  வீரகேசரி பத்திரிகை வருவதை முன்னிட்டு திரு . N .யோகேந்திரன் ஆசிரியரின் அயராத முயற்சியின் பயனாக இவ் '' தேடல் கூடம் '' நிறுவப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும் .

இவ் வாசிகசாலையின் நிர்மாணப்பணிகளில் மாணவர்கள் உட்பட  திரு . N .யோகேந்திரன் ஆசிரியர், கணித ஆசிரியர் திரு . K .கோபாலபிள்ளை மற்றும் ஆங்கில ஆசிரியர் திரு .V .நீரஜன் ஆகியோர் ஈடுபடுவதை புகைப்படங்களில் காணலாம்.












Wednesday, 27 March 2013

தேசத்துக்கு மகுடம் -2013 கண்காட்சியை எமது பாடசாலை மாணவர்கள் பார்வையிடல்

கடந்த 26.03.2013 அன்று எமது பாடசாலை மாணவர்கள் அம்பாறையில் நடைபெற்று கொண்டிருக்கும் தேசத்துக்கு மகுடம் -2013 கண்காட்சியை பார்வையிட்டனர். இக் கண்காட்சியை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்  உட்பட மாணவர்களின் பெற்றோரும் பார்வையிட்டனர்.











Monday, 18 March 2013

எமது பாடசாலையின் முற்பகுதியில் பூக்கன்றுகளை நடும் நடவடிக்கை .

எமது பாடசாலையின் முற்பகுதியில் பூக்கன்றுகளை நடும் நடவடிக்கை எமது பாடசாலையின் தமிழ் ஆசிரியர் திரு . இன்பராஜா அவர்களால் மேற்கொள்ளப்பட்டது .







யுனிசெப் நிறுவனத்தின் அன்பளிப்பு

எமது பாடசாலையில் கல்விபயிலும் தரம் 05,06 மற்றும் 07 மாணவர்களுக்கு  யுனிசெப் நிறுவனத்தால் வழங்கப்பட்ட அப்பியாச கொப்பிகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு .







Thursday, 14 March 2013

எமது பாடசாலையில் சுற்றாடல் முன்னோடிக் குழுக்கள் உருவாக்கம்.

எமது பாடசாலையில் சுற்றாடல் முன்னோடிக் குழுக்கள் திருமதி . ரஜினி பாஸ்கரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது . இக்குழுக்களுக்கு பொறுப்பான ஆசிரியராக திரு .வி .நீரஜன்  ஆசிரியர் நியமிக்கப்பட்டார் .

இவ்வைபவத்தில் சுற்றாடல் முன்னோடிக் குழுக்களில் அங்கம் வகிக்கும் மாணவர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன .




எமது பாடசாலையில் பல்லூடக கற்பித்தல் முறை (Multi Media Teaching).

எமது பாடசாலையில் ஆங்கிலப்பாடம் Muti media Projector உதவியுடன் திரு. ச .கருணாமூர்த்தி , திரு .வி .நீரஜன் ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது .

எமது மாணவர்கள் இம் முறையில் கற்பதையே  பெரிதும் விரும்புகிறார்கள் .



காலைக்கூட்டத்தில் தாந்தாமலை பிரதம வண்ணக்கர் நற்சிந்தனை வழங்குதல் .

14.03.2013 அன்று காலைக்கூட்டத்தில் தாந்தாமலை பிரதம வண்ணக்கர் மதிப்புக்குரிய துரையப்பா என்று அழைக்கப்படும் திரு . பேரின்பராஜா அவர்கள் மாணவர்களுக்கு நற்சிந்தனை ஒன்றை வழங்கினார். இவ் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் உட்பட அதிபர் மற்றும் ஆசிரியர்களும் பங்கு பற்றினர் .











Thursday, 7 March 2013

ஆலய தரிசனம்

பிரதி வெள்ளி கிழமைகளில் எமது பாடசாலை மாணவர்கள் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவர். இதில் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொள்வர் .

சென்ற வாரம் (01.03.2013) எமது பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையின் ஒழுக்கத்துக்கு பொறுப்பான
ஆசிரியர் திரு . N .யோகேந்திரன் அவர்களால் தியானப் பயிற்சி வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு.



Wednesday, 6 March 2013

எமது பாடசாலையில் கால்நடைகளால் ஏற்படும் அசௌகாரியங்களை தடுக்கும் நோக்கில் பாடசாலையின் வேலி புனரமைக்கும் பணி

எமது பாடசாலையில் கால்நடைகளால் ஏற்படும் அசௌகாரியங்களை தடுக்கும் நோக்கில்  பாடசாலையின் வேலி புனரமைக்கும் பணி
அதிபர் S .தேவராஜன் தலைமையில் மாணவர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டது .

இதில் பாடசாலையின் ஒழுக்க குழுவின் தலைமை 
ஆசிரியர் திரு . N .யோகேந்திரன் ஆசிரியரும் கலந்துகொண்டார் .