Wednesday, 7 October 2015

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவி வலய மட்ட விஞ்ஞான வினாடி வினாவிடைப் போட்டியில் மூன்றாம் இடம்.


இன்று(07.10.2015) மட்டக்களப்பு மேற்கு கல்வி  வலயத்துக்கான விஞ்ஞான வினாடி வினாவிடைப் போட்டி மட்/மமே/குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. இதில் பங்குபற்றிய தரம்-08 மாணவி செல்வி.அருட்சந்திரன் அனுஷ்கா மூன்றாம் இடத்தை பெற்றுகொண்டார்.

இம் மாணவி இவ்விடத்தை பெற்றமைக்குரிய பெருமை இவருக்கு பயிற்சிகளை வழங்கிய இப் பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியர். சி .மயூரன் அவர்களையே சாரும்.


தரம் -5 புலமைபரிசில் பரீட்சையில் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவன் சித்தி



இன்று (07.10.2015) வெளியான தரம் -5 புலமைபரிசில் பரீட்சைப் புள்ளியின் அடிப்படையில் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவன் செல்வன்.சத்யகுணசீலன் சாணுஜன் 155 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார். இம் மாணவன் சித்தியடைவதற்க்கு காரண கர்த்தாவாக இருப்பவர் இம் மாணவனுக்கு கற்பித்த ஆசிரியை திருமதி .சி .மனோகரன் ஆவார். இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (07.10.2015) பாடசாலையின் காலை ஒன்று கூடலின் போது இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் .சு .தேவராஜன் ,பிரதி அதிபர் .ச .கருணாமூர்த்தி ,ஆசிரிய ஆசிரியர்கள் ,கல்விசார ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.



Tuesday, 6 October 2015

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு-2015


மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு 06.10.2015(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந் நிகழ்வின்   போது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களால் கௌரவிக்கப்பட்டதோடு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கலைநிகழ்வுகளும்  இடம்பெற்றன.

மேற்படி நிகழ்வில் பாடசாலையின் அதிபர் .சு .தேவராஜன் , அதிபர் த.ரவிராஜ்,பிரதி அதிபர் ச.கருணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்களும் கலந்துகொண்டனர்.









Monday, 5 October 2015

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயம் சமூக விஞ்ஞான போட்டியில் வலயத்தில் சாதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி  வலய  சமூக விஞ்ஞான போட்டியில் வெற்றியீட்டிய பாடசாலைகளை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. இதில் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயம், பங்குபற்றிய  Type.I பாடசாலைகளில் அதிக இடங்களைபெற்று  வலயத்தில் முதலாம் இடத்தினையும்   அத்தோடு Type.I,II,III பாடசாலைகளுடன் மதிப்பிடும் போது வலயத்தில் மூன்றாவது இடத்தினையும் பெற்று பெருமை சேர்த்துள்ளது.

இவ்வாறு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவிகளின் பெயர் விபரம் வருமாறு.

செல்வி .ச .கௌசினி (தரம்-10) - 1 ம் இடம்.
செல்வி .க .கஜேந்தினி (தரம்-08) - 2 ம் இடம்.
செல்வி .உ .துனுஷ்கா (தரம்-07) - 2 ம் இடம்.
செல்வி .க .கவிதா  (தரம்-08) - 3 ம் இடம்.
செல்வி .ர .சுபேகா  (தரம்-06) - 3 ம் இடம்.
செல்வி . தி.தீபிகா  (தரம்-10) - 3 ம் இடம்.

இம் மாணவிகளுக்கான வெற்றி சான்றிதழ்கள் பரிசளிப்பு நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

இம் மாணவிகள் இந் நிலைகளை பெறுவதற்கு இவர்களை வழிப்படுத்தி உரிய உத்திகளை வழங்கியவர்களாக  இப்பாடசாலையின் வரலாறு பாடத்தை கற்பிக்கின்ற ஆசிரியைகளான திருமதி.தி .தவராஜா , செல்வி .வே .சுஜாதா ஆசிரியைகளையுமே சாரும்.

இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 05.10.2015(திங்கட்கிழமை) அதிபர்.சு.தேவராஜன் தலைமையில் பாடசாலையின் காலை ஒன்றுகூடலின் போது இடம்பெற்றது.  இந்நிகழ்வில் அதிபர்.த.ரவிராஜ், பிரதி அதிபர்.ச.கருணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.










Tuesday, 7 July 2015

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் கோட்டமட்ட ஆங்கிலத்தின போட்டியில் சாதனை.

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் கோட்டமட்ட ஆங்கிலத்தின போட்டியில் சாதனை.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கான மண்முனை தென்மேற்கு கோட்டத்துக்கான ஆங்கிலத்தின போட்டி நிகழ்வுகள் மட்/மமே/முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் இவ் வருடம் நடைபெற்றது .இந் நிகழ்வில் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவர்களும் பங்கு பற்றி இருந்தனர். இதில் குறித்த பாடசாலை மாணவிகள்  ஆறு இடங்களை  பாடசாலைக்கு பெற்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளனர். அத்தோடு இதில் நான்கு மாணவிகள் வலய மட்ட போட்டியில் பங்கு பற்றவும் தகமை பெற்றுள்ளனர்.

நிலைகளைப் பெற்ற மாணவிகள் விபரம் வருமாறு.

செல்வி .ந.அனுஷ்கா(தரம்-04) - முதலாம் இடம் (Copy Writing)
செல்வி .கு.சுவனியா (தரம்-07) - இரண்டாம்  இடம் (Recitation)
செல்வி .ச .ஷங்கவி (தரம்-08) - முதலாம் இடம் (Dictation)
செல்வி .க .கவிதா (தரம்-08) - இரண்டாம்  இடம் (Copy Writing)
செல்வி .க .கஜந்தினி (தரம்-08) - மூன்றாம்  இடம் (Dictation)
செல்வி .சௌ.கௌசினி (தரம்-10) - மூன்றாம்  இடம் (Copy Writing)

இம் மாணவிகள் இந் நிலைகளை பெறுவதற்கு இவர்களுக்கான பயிற்சிகளை,வழிநடத்தல்களை மேற்கொண்ட ஆசிரியர்களாக இப் பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் திரு.வி.நீரஜன் ஆசிரியர், அவருக்கு துணையாக நின்று செயற்படுகின்ற திரு.ச . கருணாமூர்த்தி ஆசிரியரும் திகழ்கின்றனர். அத்தோடு இப் போட்டிகளில் சிறந்த இடங்களை பெறுவதற்கு மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்குவிக்கின்றவர்களாக இப் பாடசாலையின் அதிபர்களான திரு.S.தேவராஜன் , திரு.T .ரவிராஜ் ஆகியோர் திகழ்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இவ் மாணவிகள் இவ் நிலைகளை பெற்றமைக்கு இப் பாடசாலையில் கற்பிக்கின்ற அனைத்து ஆசிரியர்களினதும் பங்களிப்பும் அளப்பரியது.




Friday, 26 June 2015

கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் சமூக விஞ்ஞானப்போட்டியில் மாகாண மட்டப்போட்டிக்கு தெரிவு .

கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் சமூக விஞ்ஞானப்போட்டியில் மாகாண மட்டப்போட்டிக்கு தெரிவு .

மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்துக்கான சமூக விஞ்ஞானப்போட்டி மட்/மமே/முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவ மாணவிகளும் பங்கு பற்றி இருந்தார்கள்.இப் போட்டியில் மூன்று மாணவிகள் மாகாண மட்ட போட்டியில் பங்கு பற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வலய மட்ட போட்டியில் பெற்ற நிலைகள் வருமாறு.

செல்வி .ச .கௌசினி (தரம்-10) - 1 ம் இடம்.
செல்வி .க .கஜேந்தினி (தரம்-08) - 2 ம் இடம்.
செல்வி .உ .துனுஷ்கா (தரம்-07) - 2 ம் இடம்.


இம் மாணவிகள் இந் நிலைகளை பெறுவதற்கு இவர்களை வழிப்படுத்தி உரிய உத்திகளை வழங்கியவர்களாக  இப்பாடசாலையின் வரலாறு பாடத்தை கற்பிக்கின்ற ஆசிரியைகளான திருமதி.தி .தவராஜா , செல்வி .வே .சுஜாதா ஆசிரியைகளையுமே சாரும்.


Thursday, 18 June 2015

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் மாகாண மட்ட -2015 மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் சாதனை.

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் மாகாண மட்ட -2015 மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் சாதனை.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான , மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி-2015 வந்தாறுமூலை  கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில்  இடம்பெற்றது . இவ் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலையான  மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகளும் பங்கு பற்றி ஐந்து இடங்களை பெற்று பாடசாலை,வலயம் மற்றும் மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இடங்களை பெற்ற மாணவிகள் விபரம்

11 வயதுப்பிரிவு
செல்வி.செ.நிவேதா - முதலாம் இடம் (75மீற்றர்ஓட்டம் மற்றும் 100மீற்றர் ஓட்டம்)

17 வயதுப்பிரிவு
செல்வி .வி .யமுனா -மூன்றாம் இடம்(சட்டவேலி ஓட்டம்)

19 வயதுப்பிரிவு
செல்வி .ப .டிலோஜினி -மூன்றாம் இடம் (400மீற்றர் ஓட்டம்)
செல்வி .கோ .துளசினி -மூன்றாம் இடம் (5000மீற்றர் ஓட்டம்)

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் தேசிய ரீதியில் மகளீர் உதைபந்தாட்ட போட்டியில் கடந்த வருடங்களில் மூன்றாம் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று சாதனைகளை படைத்தமை யாவரும் அறிந்த விடயமே இவ் வடிப்படையில் மெய்வல்லுனர் போட்டிகளும் நாம் சளைத்தவர்கள்  இல்லை என்பதை இப் பாடசாலை மாணவிகள் எடுத்து காட்டியுள்ளார்கள்.

இம் மாணவிகளின் இச் சாதனைகளுக்கு வித்திட்டவர்களாக இப் பாடசாலையின் அதிபர் .திரு .S .தேவராஜன் அவர்களும் இச் சாதனைகளை புரிவதற்கு  மாணவிகளுக்கு பயிற்சிகளை வழங்கிய திரு .மா .ஜீவரெட்ணம் ஆசிரியரும் திகழ்கின்றார்கள் . அத்தோடு இச் சாதனைக்கு சக பயிற்றுவிப்பாளரான  திரு .S .வேந்தராஜா ஆசிரியர் உட்பட   இப்பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களின் பங்களிப்பும் அளப்பரியது.

இம் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(18.06.2015) வியாழக்கிழமை பாடசாலையின் இணைமுதல்வர்களான  திரு .S .தேவராஜன் மற்றும் திரு .T .ரவிராஜ் ஆகியோரின்  தலைமையில் காலை ஒன்று கூடல் நிகழ்வின் போது இடம்பெற்றது . இவ் நிகழ்வில் பிரதி அதிபர் .திரு .S .கருணாமூர்த்தி ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர் .

இதன் போது பாடசாலையின் முதல்வர்களான திரு .S .தேவராஜன் ,திரு .T .ரவிராஜ் மற்றும் பிரதி அதிபர் திரு .S .கருணாமூர்த்தி அவர்களும்  சாதனை படைத்த மாணவிகளை பாராட்டியும், பயிற்றுவிப்பாளர் திரு .மா .ஜீவரெட்ணம் ஆசிரியரின் அயராத அர்ப்பணிப்பு காரணமாகவே இச் சாதனை நிலைநாட்டப்படுள்ளது எனவும் தமது உரைகளில்  தெரிவித்தனர்.

பயிற்றுவிப்பாளர் திரு .மா .ஜீவரெட்ணம் ஆசிரியர் தமது உரையில் இவ் வெற்றிக்கு பங்களிப்பு நல்கிய அதிபர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் ஒன்பது இடங்களை பெற்று  மட்/மமே/ அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தையும் , தமது பாடசாலை ஐந்து இடங்களை பெற்று இரண்டாம் இடத்தை பெற்று கொடுத்துள்ளதாகவும் தெரிவித்ததோடு

வலயத்துக்கு கிடைத்த முதல் மூன்று இடங்களில் இரண்டு இடங்களை தமது பாடசாலை மாணவிகள் பெற்று கொடுத்துள்ளனர் எனவும் கூறினார்.









Friday, 30 January 2015

தரம் -01 மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்கான ஊர்வலம்

தரம் -01 மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்கான ஊர்வலம் இன்று (30.01.2015) எமது  பாடசாலை அதிபர் .திரு .S .தேவராஜன் தலைமையில் பாடசாலையில் இருந்து ஆரம்பித்து கடுக்காமுனை கிராம வீதிகளின் ஊடாக இடம்பெற்றது . இவ் நிகழ்வில் தரம் -01 மாணவர்கள் தமது காவடி ஆட்டம் மூலம் தமது திறமையை ஊர்வலத்தில் வெளிப்படுத்தினர் . இவ் நிகழ்வு தரம் -01 க்கு கற்பிக்கும் ஆசிரியை திருமதி .சு.சோமசுந்தரம் அவர்களால் திட்டமிடப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .


இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய  விசேட கல்விக்கான உதவிக்கல்வி பணிப்பாளரும் இப் பாடசாலைக்கு பொறுப்பான PSI Coordinator உம்  ஆன திரு .S .கமலநாதன் கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தார். 











Monday, 19 January 2015

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தின் தரம்-01 க்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தின் தரம்-01 க்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (19.01.2015) அதிபர் திரு .S .தேவராஜன் தலைமையில் இடம்பெற்றது . இந் நிகழ்வில் புதிதாக தரம் -01 க்கு சேர்க்கப்படுகின்ற மாணவர்கள் ஏனைய மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய  விசேட கல்விக்கான உதவிக்கல்வி பணிப்பாளரும் இப் பாடசாலைக்கு பொறுப்பான PSI Coordinator உம்  ஆன திரு .S .கமலநாதன் கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தார். 

அத்தோடு இந்  நிகழ்வில் இப்[ பாடசாலையின் பிரதி அதிபர் திரு .S .கருணாமூர்த்தி , பாடசாலையின் ஆசிரிய ஆசிரியர்கள் , கல்விசார ஊழியர்கள் மற்றும் புதிதாக இணையும்  மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர் .

இதன் போது உதவிக்கல்விப்பணிப்பாளர்,அதிபர் ,பிரதி அதிபர் மற்றும்  ஆசிரியர்கள்,  மாணவர்களின் கல்வி வளர்ச்சி தொடர்பாகவும்  பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு  எவ்வாறு  ஒத்துழைப்பை வழங்கவேண்டும்  போன்றன தொடர்பாக  உரைகளை நிகழ்த்தினர். அதன் பின்பு மாணவர்களின் கலை   நிகழ்வுகளும் இடம்பெற்றன.